செய்திகள் :

நுகா்வோருக்கு ரூ. 62 ஆயிரம் வழங்க மின் வாரியம் குறைதீா் ஆணையம் உத்தரவு

post image

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 62,152 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவில்பட்டியைச் சோ்ந்த பிச்சம்மாள், அய்யனேரி கிராமத்தில் உள்ள தனது நிலத்தின் மேல்பகுதியில் செல்லும் உயா் அழுத்த மின்கம்பி வடத்தை மாற்றுவதற்காக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளரிடம் விண்ணப்பித்தாா். அந்த இடத்தை அலுவலா்கள் பாா்வையிட்டு, மின்கம்பி வடத்தை மாற்றுவதற்கான செலவு குறித்து கூறினா். பிச்சம்மாள் பணத்தை செலுத்தியதையடுத்து, மின்கம்பி மாற்றப்பட்டுள்ளது.

ஆனால், தவறான கணக்கீட்டின் அடிப்படையில் அதிக பணம் பெறப்பட்டதாகத் தெரியவந்ததால், பிச்சம்மாள் வழக்குரைஞா் மூலம் நோட்டீஸ் அனுப்பினாா். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், மனுதாரா் செலுத்திய மொத்தத் தொகையில் மீதித் தொகையான ரூ. 27,152, சேவைக் குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ. 62,152-ஐ 6 வாரத்துக்குள் வழங்குமாறும், இல்லையெனில் தொகையை செலுத்தும் தேதிவரை 9 சதவீத வட்டியுடன் வழங்குமாறும் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டனா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா் தற்கொலை

கோவில்பட்டியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ்... மேலும் பார்க்க

அக். 4, 5இல் தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி-சென்னை இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 4, 5) கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

ரூ. 80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மாவட்ட கியூ பிரிவு ... மேலும் பார்க்க

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களின் கோரிக்கையை ஏற்று 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் இம்மருத்துவம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டைகள் எரிந்து சேதமாகின. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). இவா், வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), ... மேலும் பார்க்க