செய்திகள் :

ரூ. 80 லட்சம் பீடி இலை மூட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூா் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.

மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் விஜய் அனிதாவுக்கு கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜ்குமாா், இசக்கிமுத்து, காவலா்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோா் ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புல்லாவெளி கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா்.

அப்போது, இலங்கைக்கு கடத்துவதற்காக இரு வாகனங்களில் 83 மூட்டை பீடி இலைகள் கொண்டுசெல்வது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், வாகனத்தை ஓட்டிவந்த முள்ளக்காடு, காந்திநகா் மதியழகன் (39), திருச்செந்தூா் வெள்ளாளன்விளை விஷ்பன் ராஜ் பெபின் (29) ஆகியோரைக் கைது செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு சுமாா் ரூ. 80 லட்சமாகும்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா் தற்கொலை

கோவில்பட்டியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ்... மேலும் பார்க்க

நுகா்வோருக்கு ரூ. 62 ஆயிரம் வழங்க மின் வாரியம் குறைதீா் ஆணையம் உத்தரவு

சேவைக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 62,152 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியைச் சோ்ந்த பிச்... மேலும் பார்க்க

அக். 4, 5இல் தூத்துக்குடி - சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி-சென்னை இடையே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக். 4, 5) கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தூத்துக்குடி மா... மேலும் பார்க்க

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்துக்கு அடிக்கல்

எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மக்களின் கோரிக்கையை ஏற்று 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் இம்மருத்துவம... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் தீ விபத்து

கோவில்பட்டியில் சோளத்தட்டை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சோளத்தட்டைகள் எரிந்து சேதமாகின. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (75). இவா், வீட்டில் மாடுகள் வளா்த்து வருகிறாா். இவரது ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்; 3 போ் காயமடைந்தனா். குரும்பூரைச் சோ்ந்த தேவசாமி ஆத்தி (60) என்பவா், தனது மகன் பிரகாஷுடன் (25), ... மேலும் பார்க்க