செய்திகள் :

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

post image

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ் படைபிரிவினால் நடத்தப்பட்ட டிஜிஏஆர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போலோ சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழா இன்று (பிப்.8) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பிரேன் சிங், இந்த போட்டியை நடத்தியதற்காக ராணுவம் மற்றும் அசாம் ரைபில்ஸ் படையினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற போட்டிகள் போலோ விளையாட்டை முன்னேற்றுவதுடன் அதற்கு பயன்படுத்தப்படும் போனி குதிரைகளை பாதுக்காக்கப்பட வழி வகுக்கும் எனவும் நவீன போலோ மணிப்பூர் மாநிலத்திலிருந்து தான் உருவானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போனி குதிரைகளை பாதுகாக்க அம்மாநில அரசு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பாக அந்த குதிரைகளின் மேய்ச்சலுக்காக கிழக்கு இம்பால் மாவட்டத்தின் லம்பேல்பட் பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதுடன், பங்கேய் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் நிலங்கள் இதற்காக பிரத்யேக நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

மேலும், அம்மாநிலத்தின் சகோல் காங்ஜெய் எனும் குதிரையேற்றத்துடன் கூடிய பாரம்பரிய பந்து விளையாட்டை முன்னேற்றி ஊக்குவிக்க பாரம்பரிய போலோ விளையாட்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, போனி குதிரைகளை பாதுகாக்க அம்மாநில பொது மக்கள் ஆதரவளித்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் இருக்குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்களினால் தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டி முன்பு போல் அனைத்து மக்களும் ஒத்துமையுடன் வாழ மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது, என அவர் கூறியுள்ளார்.

ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான அசாமில் ரூ.7 கோடி அளவிலான தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார். அசாமின் ஸ்ரீபூமி மாவட்டத... மேலும் பார்க்க

சீன நிலச்சரிவில் 30 பேர் மாயம்! தேடும் பணி தீவிரம்!

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய மாயமானோரைத் தேடும் பணி அந்நாட்டு மீட்புப் படையினரால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (பிப்.8)... மேலும் பார்க்க

15 தலிபான் தீவிரவாதிகள் கைது!

பாகிஸ்தானில் 15 தலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் கிடைக்கப்பெற்ற 143 ரகசி... மேலும் பார்க்க

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க