செய்திகள் :

தில்லி முதல்வர் பர்வேஷ்?

post image

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புது தில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவிக்கான போட்டியில் கைலாஷ் கெலாட், கபிஸ் மிஸ்ரா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்துள்ள நிலையில், ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் தோல்வி அடைந்துள்ளார்.

தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக சிசோடியா தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

இதனிடையே, கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வமாக அறிவிப்புக்கு பின்னரே வாக்குகள் வித்தியாசம் தெரியவரும்.

அதிஷி வெற்றி! கேஜரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி!

பாஜக ஆட்சி

பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தில்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. வெற்றியை வழங்கிய தில்லி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்த பர்வேஷ், மோடியிந் தொலைநோக்குப் பார்வையை தில்லிக்கு கொண்டு வரும் என பர்வேஷ் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்த தில்லி மக்கள், பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில் 2025 பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது பார்வையைத் திருப்பியுள்ளனர்.

அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த ரஷியப் பாடகர் மர்ம மரணம்!

ரஷிய அதிபர் புதினை ‘முட்டாள்’ என விமர்சித்த அந்நாட்டு பாடகரின் வீட்டில் காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.ரஷியாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும... மேலும் பார்க்க

நியூயார்க்: 5 நாள்களுக்கு மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலை கட்டுபடுத்த அங்குள்ள நகரங்களில் அடுத்த 5 நாள்களுக்கு கோழிப் பண்ணைகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூயார்க் நகரத்தின் தி குயின... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வென்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.போர்த்துகல் நாட்டைச்... மேலும் பார்க்க