செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்

post image

சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தான் அணியின் இலக்கல்ல, இந்திய அணியை வீழ்த்துவதும்தான் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது.

இதையும் படிக்க:ராகுல் டிராவிட், ஜோ ரூட் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

இந்திய அணி பிப்ரவரி 20 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து விளையாடவுள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்தியாவை வெல்வதுதான் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தான் அணியின் இலக்கல்ல, இந்திய அணியை வீழ்த்துவதும்தான் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அறிமுகமான திடலிலே புதிய மைல்கல்லை எட்டிய நாதன் லயன்..!

புதுப்பிக்கப்பட்ட கடாஃபி மைதானத்தை திறந்து வைத்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பேசியதாவது: நம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நமது வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தானின் இலக்கல்ல. இந்திய அணியை வீழ்த்துவதும் பாகிஸ்தான் அணியின் இலக்காகும். ஒட்டு மொத்த பாகிஸ்தானும் நமது வீரர்களுடன் துணை நிற்கிறது என்றார்.

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கட்டாக் வந்தடைந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்ட... மேலும் பார்க்க

3ஆம் நாள் முடிவு: 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை!

காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. அடுத்து விளையாடிய ஆஸி. 414 ரன்களுக்... மேலும் பார்க்க

ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்டின் சாதனையை அலெக்ஸ் கேரி முறியடித்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

7,222 ரன்களுடன் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்..! மரியாதை செய்த ஆஸி. அணி!

இலங்கை வீரர் திமுத் கருணரத்னே தனது கடைசி டெஸ்ட்டில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அன... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு தலைசிறந்த கேட்ச்..! ஸ்டீவ் ஸ்மித்தின் விடியோ!

ஆஸி. டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டுமொரு அசத்தலான கேட்ச் பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 2 கேட்ச்சுகள் பிடித்ததன் மூலமாக 197 கேட்ச்சுகளுடன் ரிக்கி பாண்டிங்கை ம... மேலும் பார்க்க

நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முத... மேலும் பார்க்க