செய்திகள் :

``நான் ஏன் குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்!'' - எதிர்மறையான விமர்சனங்களுக்கு நாக சைதன்யா பதிலடி

post image
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `தண்டேல்'.

நாக சைதன்யா - சமந்தா தம்பதி தங்களின் திருமண வாழ்விலிருந்து விலகிக் கொள்வதாக கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தனர். இச்செய்தி இருவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இப்போது வரை இவர்களின் விவாகரத்து தொடர்பாக பல எதிர்மறையான கருத்துகள் தொடர்ந்து பரபப்பட்டு வருகின்றன. இந்த எதிர்மறையான கருத்துகள் பற்றி `தண்டேல்' திரைப்படத்திற்கான பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் நாக சைதன்யா.

அந்த நேர்காணலில் பேசியிருக்கும் நாக சைதன்யா, ``நாங்கள் எங்கள் வழியில் செல்ல விரும்பினோம். இருவரும் சொந்த காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துகிறோம். மேலும் , எங்கள் வாழ்க்கையிலும் முன்னேறி வருகிறோம். இதற்கு மேலும் இந்த விஷயத்தில் என்ன விளக்கம் தேவைபடுகிறதென எனக்கு புரியவில்லை. விவாகரத்து என்பது என் வாழ்க்கையில் மட்டும் நடக்கும் விஷயமல்ல. நான் ஏன் ஒரு குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்.

நாக சைதன்யா, சமந்தா

நானும் ஓர் உடைந்த குடும்பத்திலிருந்து வந்த குழந்தைதான். ஒரு உறவை முறித்துக் கொள்வதற்கு முன் நான் 1,000 முறை சிந்திப்பேன். அதன் பின்விளைவுகள் எனக்கு நன்றாக தெரியும். நானும் அவரும் இப்போது வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்கிறோம். நான் மீண்டும் காதல் கொண்டு திருமணம் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் எதிர்மறையான விஷயங்களை பரப்பாமல் அவரவர் வாழ்க்கையில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். நேர்மறையான சிந்தனைகளை மட்டும் பரப்புங்கள்." எனக் கூறியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

ரஜினி படத்தின் தெலுங்கு தயாரிப்பாளர் கோவாவில் தற்கொலை - போலீஸ் விசாரணை!

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே.பி.சௌத்ரி (44) தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ரஜினி நடித்த கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்ததன் மூலம் மேலும் பிரபல... மேலும் பார்க்க

கீரவாணி வீட்டு கல்யாணம்; ராஜமௌலி செலெக்ட் செய்த 'மாதம்பட்டி விருந்து' - என்னென்ன உணவுகள் இருந்தன?

ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணியின் இளையமகன் நடிகர் சிம்ஹா கொடுரியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி யு.ஏ.இ-யில் நடைபெற்றது. மூத்த நடிகர் முரளி மோகனின் பேத்தி ராக மாதங்கியை மணந்தார்.இந்த த... மேலும் பார்க்க

Rashmika Mandanna: 'இதுபோதும்; சந்தோஷமாக ஓய்வு பெற தயார் என்றேன்' - ராஷ்மிகா பேசியது என்ன?

புஷ்பா படத்தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் 'சாவா'.மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமா... மேலும் பார்க்க

Ram Gopal Varma:``சத்யா படத்தின் வெற்றி என்னைக் கண்மூடித்தனமாக்கியது''- ராம் கோபால் வர்மா

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ் திரைப்படமான `சத்யா' திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்த்த பிறகு ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில் நீ... மேலும் பார்க்க

DaakuMaharaaj Review: `நூடுல்ஸுக்கு தான் 2 மினிட்ஸ், எனக்கு 2 செகண்ட்ஸ்' - பாலைய்யா வென்றாரா?

'அகண்டா', 'வீர சிம்ஹா ரெட்டி', 'பகவந்த் கேசரி' என ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணா ஆடியிருக்கும் தாண்டவமே இந்த 'டாக்கு மஹாராஜ்'. பாபி கொல்லி இயக்கத்தில் தமன் இசையில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெ... மேலும் பார்க்க

Game Changer Review: 'அக்கறை' அரசியல், பார்முலா காதல் காட்சிகள், பிரமாண்டங்கள் - இவை மட்டும் போதுமா?

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்கிறார் ராம் நந்தன் (ராம் சரண்). தனது மாவட்டத்திலிருந்து குற்றவாளிகளை அகற்றும் பணியில், ஆளும் கட்சியின் முதலமைச்சரின் மகனும், அமைச்சருமா... மேலும் பார்க்க