செய்திகள் :

இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- எடப்பாடி பழனிசாமி

post image

இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்று தில்லி பேரவைத் தேர்தல் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு இடைத்தேர்லில் திமுக பெற்றது வெற்றி கிடையாது, போலி வெற்றி. யாருமே களத்தில் கிடையாது.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்கிற மமதையில் திமுகவினர் உள்ளனர்.

2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக கூட்டணியை அமைக்கும். கூட்டணி என்பது எதிரிகளை வீழ்த்த வேண்டும். வாக்கு சிதறாமல் அனைத்துக் கட்சிகளின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வேண்டும்.

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

எங்கள் எதிரி திமுகதான். அந்த அடிப்படையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

தில்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். அதனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். தில்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கட்சி பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

நல்லாட்சிக்கான நற்சான்றிதழ்தான் ஈரோடு கிழக்கு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தேர்தல்: திமுக வெற்றி; டெபாசிட் இழந்த நாதக!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும... மேலும் பார்க்க

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலரும்: தமிழிசை

தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னை கமலாலயத்தில் பாஜகவினர்... மேலும் பார்க்க

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும்: நாராயணசாமி

என்.ஆர். காங்கிரஸ் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் படுதோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை அவமதித்த அமெரிக்காவைக் கண்டித்தும், அமெரிக்... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும்: திருமாவளவன்

தில்லி தேர்தல் முடிவுகளைக் கருத்தில்கொண்டு இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஈகோவைக் கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுடன்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், முதல் சுற்று நிலவரத்தில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1.081 வாக்குகளுடன் இரண்ட... மேலும் பார்க்க