செய்திகள் :

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

post image

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறவில்லை. தில்லி தேர்தல் முடிவுகள் பற்றி வயநாடு எம்பி அவரது கருத்தை வெளியிட்டுள்ளார்.

கேரளத்திற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள பிரியங்கா காந்தி, அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக வயநாடு எம்பி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

தில்லி தேர்தலுக்கு முன்னதாக நடந்த கட்சி கூட்டங்களிலேயே மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. மக்கள் சலித்துவிட்டார்கள், ஆட்சி மாற்றத்தை அவர்கள் எதிர்பார்ப்பதால் தான் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

மக்களுக்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். அவர்களுக்காகக் களத்தில் இறங்க வேண்டும், மக்களின் பிரச்னைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அதுதான் மக்களைச் சென்றடையச் சரியான வழியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 70 தொ... மேலும் பார்க்க

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க

தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!

தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற... மேலும் பார்க்க