செய்திகள் :

தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!

post image

தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி தோல்வியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் விரேந்திர சிங் கடியன் 22,191 வாக்குகள் பெற்றும், பாஜகவின் புவனா தன்வார் 20,162 வாக்குகளும் பெற்றுள்ளார். விரேந்திர சிங் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று, கோண்ட்லி தொகுதியிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் 6,293 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட பிரியங்கா கௌதம் தோல்வியைத் தழுவியுள்ளார்.

அதே நேரத்தில் பாஜகவின் மஞ்சிந்தர் சிங் சிர்சா ரஜோரி கார்டனில் 18,190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஷாலிமார் தொகுதியில் பாஜகவின் ரேகா குப்தா, ஆம் ஆத்மி போட்டியாளரை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளது, தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, பாஜக வெற்றியைச் சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க

பிரதமர் மோடி, தில்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி : கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும் தில்லி மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று புது... மேலும் பார்க்க