‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!
தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!
தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் வெற்றி தோல்வியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் விரேந்திர சிங் கடியன் 22,191 வாக்குகள் பெற்றும், பாஜகவின் புவனா தன்வார் 20,162 வாக்குகளும் பெற்றுள்ளார். விரேந்திர சிங் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோன்று, கோண்ட்லி தொகுதியிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் 6,293 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட பிரியங்கா கௌதம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதே நேரத்தில் பாஜகவின் மஞ்சிந்தர் சிங் சிர்சா ரஜோரி கார்டனில் 18,190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஷாலிமார் தொகுதியில் பாஜகவின் ரேகா குப்தா, ஆம் ஆத்மி போட்டியாளரை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக தில்லியில் ஆட்சியை அமைக்கத் தயாராக உள்ளது, தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின்படி, பாஜக வெற்றியைச் சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது.