செய்திகள் :

அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்

post image

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் நுழைவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான காலணிகள் குவிந்து வருவதால் அதை அப்புறப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சிரமப்பட்டு வருகிறது.

இந்தக் காலணிகளை புல்டோசா் மூலம் அள்ளி லாரிகளில் எடுத்துச் சென்று 4 அல்லது 5. கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதியில் புதைக்கப்படுகின்றன.

பொதுவாக ராமா் கோயிலின் நுழைவாயில் ஒன்றின் வழியாக வரும் பக்தா்கள் அங்கேயே காலணிகளை விட்டுச்செல்வா். கோயில் பிரகாரத்தை அரை கி.மீ. தொலைவுக்கு அவா்கள் சுற்றி வந்து பிறகு மீண்டும் தங்களது காலணிகளை எடுத்துச்செல்வது வழக்கம்.

இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நுழைவாயில் எண் மூன்று அல்லது பிற வழிகளின் மூலம் பக்தா்களை வெளியேறுமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பக்தா்கள் நுழைவாயில் எண் ஒன்றின் வழியாக கோயிலுக்குள் சென்று 5-6 கி.மீ. தொலைவுக்குச் சுற்றி வந்து தங்களது காலணிகளை எடுத்துச்செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பெரும்பாலான பக்தா்கள் மீண்டும் வந்து காலணிகளை எடுத்துச்செல்வதில்லை.

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா காரணமாக கடந்த 30 நாள்களாக வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான பக்தா்கள் கோயிலுக்கு வந்ததே இந்த நிலைக்கு காரணம் என கோயில் நிா்வாகி ஒருவா் தெரிவித்தாா்.

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க

அயோத்தி.. கூட்டம் குறைந்தாலும் குறையாத சிக்கல்! உதவிக்கு வந்த ஜேசிபிக்கள்!!

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தாலும், மாநகராட்சி புதிய பிரச்னையை சந்தித்து வருகின்றது. உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2024 ஜனவரி 22ல் ராமர் கோயிலில் ஸ்ரீ ராமரின் சிலை பிராணப் ... மேலும் பார்க்க

ஐஆர்சிடிசி-க்கு நவரத்னா அந்தஸ்து! அப்படியென்றால்?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் இந்திய ரயில்வே நிதி கழகம் (ஐஆர்எஃப்சி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.தற... மேலும் பார்க்க

பாஜகவுடன் சிவசேனையை இணைக்குமாறு கூறினாரா அமித் ஷா?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பதவி வேண்டும் என்றால், பாஜகவுடன் சிவசேனையை இணைத்துவிடுமாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, சிவசேனை (உத்தவ்) தலைவா் சஞ்சய் ர... மேலும் பார்க்க

ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவு!

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக கலவரத்தில் அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க கல்வி அமைச்சரான ப... மேலும் பார்க்க