செய்திகள் :

அரசின் அக்கறையின்மையே உயிரிழப்புக்குக் காரணம்: மாயாவதி

post image

பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலுக்குக் கர்நாடக அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி கண்டம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெறும் 35 ஆயிரம் பேர் மட்டுமே நுழைய இடமிருந்த சின்னசாமி அரங்குக்குள் 3 லட்சம் பேர் நுழைந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, நெரிசலை ஏற்படுத்தியதற்காக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைப் போல, சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் கைது செய்யப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து இன்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களுடன் மாயாவதி பேசுகையில்,

அரசுத் திட்டங்களில் தீவிரமாகவும், உணர்திறன் மிக்கதாகவும் இல்லாததால், ஒவ்வொரு முறையும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது மிகுந்த கவலைக்குரியது. மாநில அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பெங்களூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு துயர நிகழ்வாகும். நாட்டின் அரசியலில் எதிர்மறை, வெறுப்பு, விரோதம், குறுகிய மனப்பான்மை, ஒருவருக்கொருவர் எதிராக வழக்குத் தொடருதல் ஆகியவை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஏதோ ஒரு பிரச்னையில் தலைவர்களின் முரட்டுத்தனமான மற்றும் அநாகரீகமான நடத்தையால் பொதுமக்கள் மிகவும் வருத்தப்படுகிறார்கள். நாட்டில் உள்ள நச்சு சூழல் அதன் வளர்ச்சி மற்றும் சுயச்சார்பு முயற்சிகளை நேரடியாகத் தடுக்கிறது.

நாட்டின் பணக்காரர்களின் செல்வம் இப்போது பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளுக்குச் செல்கிறது, இதன் காரணமாக வறுமை, வேலையின்மை, கல்வியறிவின்மை மற்றும் பின்தங்கிய நிலை போன்ற எரியும் பிரச்னைகள் இன்னும் தீவிரமாகி வருகின்றன என்று அவர் கூறினார்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க