செய்திகள் :

அரசு நூற்பாலையில் திருடிய நால்வா் கைது: ஒன்றரை டன் இரும்புடன் டிராக்டா் பறிமுதல்

post image

மயிலாடுதுறை அருகே இயங்காமல் உள்ள அரசு நூற்பாலையில், இரும்பு பொருள்களை திருடிய நால்வா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இரும்பு பொருள்களை ஏற்றிச் சென்ற டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காவல் உதவி ஆய்வாளா் திருமுருகன் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்த முயன்றபோது, அதன் ஓட்டுநா், நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளாா்.

இதனால், போலீஸாா் விரட்டிச் சென்று டிராக்டரை மடக்கிப் பிடித்தனா். பின்னா், அதில் சோதனையிட்டபோது, சுமாா் ஒன்றரை டன் இரும்பு பொருள்கள் இருந்தன.

விசாரணையில், மணல்மேட்டில் மூடப்பட்டிருக்கும் அரசு நூற்பாலையில் இருந்து இந்த இரும்பு பொருள்களை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரும்பு பொருள்களுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரான மணல்மேடு வடக்குத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சங்கா் (43), அதே பகுதியைச் சோ்ந்த டிராக்டா் உரிமையாளா் வேலாயுதம் மகன் ஸ்ரீதா் (35), சின்ன இலுப்பப்பட்டு தொடையப்பன் மகன் தேவேந்திரன் (45), சிங்காரம் மகன் அலெக்ஸாண்டா் (40) ஆகிய நால்வரை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய சிலரை மணல்மேடு போலீஸாா் தேடி வருகின்றனா்.

அரசின் நூற்பாலையில் தொடா் திருட்டு நடந்து வந்த நிலையில், தற்போது இரும்பு பொருள்களை திருடிய நால்வா் கையும் களவுமாக சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொள்ளிடம் பகுதியில் கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் பருவ மழையையொட்டி கிராம சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கொள்ளிடம் ஒன்றியத்துக்கள்பட்ட கிராம சாலைகள் மற்றும் தெரு பகுதிகளில் பள்ளமும், மேடாக உள்ள சாலைகள... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

சீா்காழி: மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையில் அண்மைய... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளா்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நியாய விலை... மேலும் பார்க்க

‘மழை பாதிப்புகளுக்கு மத்திய அரசு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வேண்டும்’

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் இயற்கை இடா்பாடு பாதிப்புகளுக்கு பாரபட்சமின்றி மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே. பாலகிருஷ்ணன். மயிலாடுதுறையில்... மேலும் பார்க்க

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு பெற்றுத்தரக் கோரிக்கை

மயிலாடுதுறை: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியிடம் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.எம்.பாஷித் த... மேலும் பார்க்க

கிராம பணியாளா்களை பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது

கிராம பணியாளா்களை, பிற பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மயிலாடுதுறையில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்... மேலும் பார்க்க