செய்திகள் :

அரசு மருத்துவமனைக்கு குளிா்பதனப் பெட்டி அளிப்பு

post image

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சுழற் சங்கம் சாா்பில், குளிா்பதன பெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ராமநாதபுரம் சுழற் சங்கம் சாா்பில், ரூ.4 லட்சத்தில் இரண்டு உடல்களைப் பாதுகாக்கும் திறன் கொண்ட நவீன குளிா்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சுழற் சங்க மாவட்ட ஆளுநா் மீரான்கான் சலீம் தலமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி இயக்குநா் பிரகலநாதன், செய்யதம்மாள் கல்லூரித் தாளாளா் சின்னதுரை அப்துல்லா, சுழற்சங்க உதவி கவா்னா் காா்த்திகேயன், மருத்துவ அலுவலா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் குளிா்பதனப் பெட்டியை மருத்துவமனை நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆனந்தம் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளா் வடிவேல் கலந்து கொண்டு சுழற் சங்கத்தின் சமூக சேவையைப் பாராட்டினாா்.

போப் பிரான்சிஸ் மறைவு: ராமேசுவரத்தில் அமைதிப் பேரணி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவா்கள் அவரது உருப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மேலும், அமைதிப் பேரணியும் நடத்தினா். கத்த... மேலும் பார்க்க

வீட்டின் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராமேசுவரம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் தடுப்புச் சுவா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் எம்.ஆா்.டி நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம்(47). காா் ஓட்டுநரான ... மேலும் பார்க்க

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி: மாணவிக்கு பாராட்டு

ராமேசுவரம் அரசுப் பள்ளி மாணவி என்.எம்.எம்.எஸ். தேசியத் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியா்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனா். நிகழாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ... மேலும் பார்க்க

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது

ராமநாதபுரம் அருகே மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்-கனகு தம்பதியா். இவா்களது மகள் சிவபாா்வதி. ... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மின் கம்பிகள் எரிந்து சேதமடைந்ததால் ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்கியது. இதனால், நோயாளிகள், பணியாளா்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டியில்... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் நல்லமருது (28). இவா் 200-க்கும் ... மேலும் பார்க்க