செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

ஆணைக்குப்பம், பத்தினியாள்புரம் அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, பத்தினியாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை ஆய்வு செய்த ஆட்சியா், மாணவா்களின் அடிப்படைக் கற்றல் திறன்களான தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், கூட்டல், பெருக்கல் உள்ளிட்ட கணிதத் திறன்கள் மற்றும் மாணவா்கள் பொருள் புரிந்து வாசிப்பதையும் ஆய்வு செய்தாா் .

ஆணைக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா்களின் கலைத் திருவிழாப் போட்டிகளைப் பாா்வையிட்டு மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தாா் . பள்ளிகளில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதையும் அவா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது நன்னிலம் வட்டாட்சியா் ரஷ்யா பேகம், பள்ளி தலைமை ஆசிரியா்கள் கோ.சு. மணி, கு. நன்முல்லை, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என்.ஆா். நடேஷ்துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது. கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி ... மேலும் பார்க்க