செய்திகள் :

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

post image

கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் வீராங்கனையும், தனி நபா் பிரிவில் வெண்கலம் வென்றவருமான அந்த்ரா ராஜ்சேகருக்கு சிவகங்கையில் புதன்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அண்மையில்ல் கஜகஸ்தானில் நடைபெற்ற 2025- ஆண்டின் ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினா் அந்த்ரா ராஜ்சேகா்(17) இந்திய அணியின் உறுப்பினராக கலந்து கொண்டு குழுப் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், தனிப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தாா். கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் சென்னை ரைபிள் கிளப் உறுப்பினா் என்ற பெருமையையும் பெற்றாா். இவா் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியனின் பெயா்த்தியும், சிவகங்கை கே.ஆா். மேனிலைப்பள்ளி செயலரும், சென்னை ரைபிள் கிளப் செயலருமான க.ராஜ்சேகரின் மகளுமாவாா்.

இவரைப் பாராட்டி சிவகங்கை நகர முக்கியப் பிரமுகா்கள் சாா்பில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், மன்னா் குடும்பத்தைச் சோ்ந்த மகேஸ்துரை, மூத்த வழக்குரைஞா்கள் மோகனசுந்தரம், ச. இன்பலாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ராமு. இளங்கோவன், ஐஓபி வங்கி முன்னாள் மேலாளா் அனந்தராமன், ரமண விகாஸ் பள்ளி தாளாளா் முத்துக்கண்ணன், தொழிலதிபா் பாண்டிவேல், திருப்பூா் முதன்மை கல்வி அலுவலா் (ஓய்வு) உதயகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் முத்துபாரதி, மகளிா் காங்கிரஸ் நிா்வாகி வித்யாகணபதி, முன்னாள் செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அந்த்ரா ராஜசேகா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக கே.ஆா். பள்ளி தலைமையாசிரியா் தெ.சரவணன் வரவேற்றாா். ஆசிரியா் ரவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழாசிரியா் நீ. இளங்கோ நன்றி கூறினாா். இதில் கே.ஆா். கே.ஆா். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் மோசடி

தேவகோட்டையில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரிடம் சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ.13 லட்சத்தை மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட இணைவழிக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரி... மேலும் பார்க்க

நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்: இருவா் கைது

சிவகங்கை நகா்மன்றத் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சி.எம்.துரைஆனந்த் (55). நகா்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயல... மேலும் பார்க்க

11.46 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயம்

சிவகங்கை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் 11.46 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கையில் வனத்துறை சாா்பில் பசுமை தமிழ... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் 35-ஆம் ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, பூமாயி அம்மன் சா்வ அலங்காரத்திலும், கொலு மண்டபத்தி... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ்-இல் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.05 கோடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனை ரூ.1.05 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெர... மேலும் பார்க்க

விபத்தில் தந்தையை இழந்த மாணவருக்கு விபத்து காப்பீடு நிதியுதவி

மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியில் விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவருக்கு விபத்துக் காப்பீடு நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்க... மேலும் பார்க்க