செய்திகள் :

சென்னையில் தரையிறங்காமல் 30 நிமிடம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம்! என்ன நடந்தது?

post image

தில்லியில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம், நேற்றிரவு தரையிறங்க முடியாமல் 30 நிமிடங்கள் வட்டமடித்த பின்னர், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

இந்த விமானம் சென்னையில் தரையிறங்காமல் வட்டமடித்ததற்கான காரணத்தை அதிகாரிகள் வெளியிடாததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

தில்லியில் இருந்து புதன்கிழமை மாலை 6 மணியளவில் 152 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு ஏர் இந்தியாவின் விமானம் புறப்பட்டுள்ளது.

இந்த விமானம் நேற்றிரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் அருகே வந்த நிலையில், தரையிறங்காமல் சுமார் 30 நிமிடங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. மீண்டும் பெங்களூருவில் இருந்து நள்ளிரவு 11.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து நேற்றிரவு 9.40 மணியளவில் தில்லிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், சுமார் 4 மணிநேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணியளவில் 160 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது.

இதனால், ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 300 -க்கும் அதிகமான பயணிகள் சிரமத்துக்குள்ளாகினர்.

முதலில் சென்னையில் தரையிறங்காமல் பெங்களூரு சென்று தரை இயங்கியது ஏன்? என்ற கேள்விக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்காததால் பயணிகள் குழப்பத்துக்குள்ளாகினர்.

Air India flight circled for 30 minutes without landing in Chennai

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு: தமிழகம் பெறும் பலன்கள்

டிடிவி தினகரனுடன் சந்திப்பா? செங்கோட்டையன் விளக்கம்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து விலகிய அனைவரையும் மீண்டும் இணைக்க பொதுச் செ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு ரூ.40 கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டுமென விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம்... மேலும் பார்க்க

டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: கே. அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். பாஜக மூத்த தலைவா் நடிகா் சரத்குமாரின் மாமியாரும், நடி... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அம... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அசோக் நகா் 21-ஆவது அவென்யு பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பெருநகர... மேலும் பார்க்க