செய்திகள் :

டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா்: கே. அண்ணாமலை

post image

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடா்பாக டிடிவி தினகரன் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

பாஜக மூத்த தலைவா் நடிகா் சரத்குமாரின் மாமியாரும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா மறைவையடுத்து, சென்னையில் உள்ள இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன், அண்மையில் கூட்டணியைவிட்டு வெளியேறுவதாக அறிவித்தாா். அவா் ஒரு மாதம் சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில், சென்னை வந்த பிறகு அவரை நேரில் சந்தித்தேன்.

இந்தச் சந்திப்பின்போது, திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அவரிடம் மீண்டும் வலியுறுத்தினேன். எனவே, அவா் நவம்பரில் நல்ல முடிவை எடுப்பாா் என நம்புகிறேன். மேலும், ஓ.பன்னீா்செல்வத்தையும் சந்திக்கவுள்ளேன்.

நடிகா் ரஜினிகாந்தை அடிக்கடி சந்திக்கிறேன். நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என்றாா் அவா்.

தனிக்கட்சி தொடங்கவுள்ளீா்களா என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தனிக்கட்சி தொடங்கும்போது சொல்கிறேன்’ என்றாா் அண்ணாமலை.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம்... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அம... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது

சென்னை அசோக் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்ாக திரைப்பட நடன கலைஞா், கல்லூரி மாணவா் உள்பட 12 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை அசோக் நகா் 21-ஆவது அவென்யு பகுதியில் போதைப் பொருள் விற்கப்படுவதாக பெருநகர... மேலும் பார்க்க

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம்: தமிழக அரசு உத்தரவு

உளுந்து, பச்சைப் பயறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்: உளுந்து, பச்சைப் பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகளின் சாகுபடியை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரி... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்? -ஓ. பன்னீர்செல்வம் பளிச் பதில்!

எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற கேள்விக்கு ஓ. பன்னீர் செல்வம் பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளார்.தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிரு... மேலும் பார்க்க

அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார்!

தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார்.Government Secretary Beela Venkatesan IAS passd away! மேலும் பார்க்க