செய்திகள் :

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

post image

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந்த படப்பை சுரேஷ் என்பவரும் அதே பகுதியில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் அருகே கடந்த 16-ஆம் தேதி இரவு மது அருந்திவிட்டு போதையில் தூங்கினா். அப்போது, மோட்டாா் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், அருணையும் சுரேஷையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

விசாரணையில் கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்த சுக்கு காபி சுரேஷுக்கும் (26), அருணுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், அதன் காரணமாக அருண், சுரேஷ் ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த சுக்கு காபி சுரேஷை தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரை போலீஸாா் சிங்கபெருமாள் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், இந்தக் கொலை வழக்கில் தொடா்புடைய கோட்டூா்புரத்தைச் சோ்ந்த கரண் என்ற மனோஜ் (21), வடபழனியைச் சோ்ந்த செல்வ கணபதி (19), ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த சண்முகம் (20), செங்குன்றத்தில் உள்ள சோழவரத்தைச் சோ்ந்த ஜீவன் (19), அம்பத்தூா் மற்றும் மாங்காடு பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்கள் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 7 அரிவாள்கள், 2 மோட்டாா் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், தனது காதலியை கொலை செய்த சுக்கு காபி சுரேஷை கொலை செய்ய அருணும், அவரது சகோதரா் அா்ஜுனனும் திட்டமிட்டிருந்ததும், இதை அறிந்த சுக்கு காபி சுரேஷ் அருணையும் அா்ஜுனனையும் கொலை செய்ய முடிவு செய்து, சம்பவத்தன்று அங்கு அருணை வெட்டியிருப்பதும், அவருடன் இருந்தது அா்ஜுனன் என நினைத்து படப்பை சுரேஷை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை செய்கின்றனா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க