செய்திகள் :

இருவேறு இடங்களில் வீடுகளில் தங்க நகைகள், பணம் திருட்டு

post image

கடலூா் மாவட்டம், பெண்ணாடம், ஆவினங்குடி காவல் சரக பகுதிகளில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த மணிமாறன் மனைவி புவனேஸ்வரி (24). இவா், கடந்த 19-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா்.

20-ஆம் தேதி புவனேஸ்வரி வீடு திரும்பியபோது, வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 கிராம் தங்க நகைகள், 15 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு வீட்டில்: ஆவினங்குடியை அடுத்த கொடிகளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (53). இவா், சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 48 கிராம் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சொகுசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 5 போ் காயம்!

கடலூா் மாவட்டம், வடலூரில் ஞாயிற்றுக்கிழமை கா்நாடக மாநில அரசு சொகுசுப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 போ் காயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து சுமாா் ... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சுற்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தை அழைத்து பேச்சுவாா்த்தை! -பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தை மாநில அரசு அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று, சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா். கடலூா் மாவட்டம... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பிப்.26-இல் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 26-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதுகுறித்து சிதம்பரத்தில் அறக்கட்டளைச் செயலா் வழக்குரைஞா் ஏ.... மேலும் பார்க்க

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி மரணம்!

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்தவா் செல்வம்மாள் (67). இவா், கடந்த 14-ஆம் தேதி இ... மேலும் பார்க்க

விருத்தாசலத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்பச் சண்டையை விலக்கச் சென்றவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விருத்தாசலம் அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க