இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகள் பறிமுதல்
அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் இருந்த சுமாா் 1.4 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்கள் குறித்து சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகளை சுங்கத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் சுங்கத் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தும்படி கூறினராம். ஆனால், வாகன ஓட்டி அந்த வாகனத்தை இனிகோ நகா் பகுதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, அந்த வாகனத்தை சுங்கத் துறையினா் சோதனை செய்ததில், அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.