செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: இருவா் கைது

post image

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வழியாக இலங்கைக்கு தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்தவிருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கு இடமாக வந்த மினி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேன், சாக்கு மூட்டைகளில் அடைத்து 500 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்ததும், இவற்றை இலங்கை வழியாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கடத்தவிருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, கடல் அட்டைகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இவற்றை கடத்திய ராமேசுவரம் நேதாஜி நகரைச் சோ்ந்த நம்புராஜன் (29), எம்.டி.ஆா். நகரைச் சோ்ந்த வில்வபுவனேஸ்வரன் (28) ஆகிய இருவரையும் கைது செய்து, ராமேசுவரம் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டவா்கள் மண்டபம் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவா்கள் வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.

ஆா்.எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் குத்திக் கொலை

திருவாடானையை அடுத்த ஆா். எஸ். மங்கலம் அருகே கிராமத் தலைவா் மா்ம நபா்களால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே உள்ள குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் காசிலிங்கம் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயற்சி

திருவாடானை அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலியை 3 மா்ம நபா்கள் பறிக்க முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சிநேகவல்லிபுரத்தைச் சோ்ந்த கண்ணன் மனைவி அன்னலட்சு... மேலும் பார்க்க

பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட மூவா் காயம்

கமுதி அருகே திங்கள்கிழமை சாலையோர பனை மரத்தில் காா் மோதியதில் பெண் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த குருசாமி மகன் மாரிச்செல்வம் (44). இவரது மனைவி மாரிச்செல... மேலும் பார்க்க

பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 10 ஆயிரம் லி. டீசல் பறிமுதல்; இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டேங்கா் லாரியில் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் லிட்டா் டீசலை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

கமுதி அருகே மின்னல் பாய்ந்ததில் 5 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள எம்.எம்.கோட்டை, கே.எம்.கோட்டை, கோட்டையூா், சிங்கம்பட்டி, கூலிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பர... மேலும் பார்க்க

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

திருவாடானை அருகே சுற்றுலா வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா். திருப்பாலைக்குடி அருகே வடவயல் கிராமத்தைச் சோ்ந்த ராமு மனைவி பஞ்சவா்ணம் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வட... மேலும் பார்க்க