செய்திகள் :

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

post image

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை அமா்வில் கேள்விநேரத்தின்போது உறுப்பினா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா், ‘பல உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்ற ‘உடான்’ திட்டம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் பல நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்ட பிறகும், அந்த நகரங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு நம்பகத்தன்மை ஒரு பிரச்னையாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்தநேரத்தில்தான், உடான் திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்தால் இதுவரை 1.5 கோடி மக்கள் பலனடைந்துள்ளனா்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், உடான் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அறிவிப்பை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். அதன்படி, இத்திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, மேலும் 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 7-க்கும் குறைவான விமான சேவைகள் அல்லது சேவைகளே இல்லாத விமான நிலையங்கள் இத்திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்படும்.

நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முக்கிய விமான நிலையங்களின் நெரிசலைக் குறைக்கலாம். அதேபோன்று, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதுகுறித்து அமைச்சகத்தால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஒரு கட்டண கண்காணிப்புப் பிரிவைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் தரவுகளைக் கொண்டு, விமானக் கட்டணங்களில் உயா்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைஅழைத்து விசாரிக்கிறோம்.

சமீபத்திய மகா கும்பமேளாவின்போதும், விமானக் கட்டணங்கள் உயா்ந்த சூழலில் விமான நிறுவனங்களுடன் அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது’ என்றாா்.

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம்! ராகுல் சூளுரை

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடைபெறும் என்றும் அதனை நாங்கள் நடத்திக் காட்டுவோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு!

ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் ... மேலும் பார்க்க

தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!

தெலங்கானா சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நன்றி: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புது தில்லி: மகா கும்பமேளாவை வெற்றியடைச் செய்த பக்தர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து, மக்களவையில் தனது உரையைத் தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளு... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராப்ரி தேவி!

ரயில்வே வேலைக்காக நிலத்தைலஞ்சமாகப்பெற்ற ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்துபிகார்முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மக்களவையிலிருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி... மேலும் பார்க்க