செய்திகள் :

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

post image

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை அமா்வில் கேள்விநேரத்தின்போது உறுப்பினா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா், ‘பல உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்ற ‘உடான்’ திட்டம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் பல நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்ட பிறகும், அந்த நகரங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு நம்பகத்தன்மை ஒரு பிரச்னையாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்தநேரத்தில்தான், உடான் திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்தால் இதுவரை 1.5 கோடி மக்கள் பலனடைந்துள்ளனா்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், உடான் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அறிவிப்பை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். அதன்படி, இத்திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, மேலும் 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 7-க்கும் குறைவான விமான சேவைகள் அல்லது சேவைகளே இல்லாத விமான நிலையங்கள் இத்திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்படும்.

நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முக்கிய விமான நிலையங்களின் நெரிசலைக் குறைக்கலாம். அதேபோன்று, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதுகுறித்து அமைச்சகத்தால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஒரு கட்டண கண்காணிப்புப் பிரிவைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் தரவுகளைக் கொண்டு, விமானக் கட்டணங்களில் உயா்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைஅழைத்து விசாரிக்கிறோம்.

சமீபத்திய மகா கும்பமேளாவின்போதும், விமானக் கட்டணங்கள் உயா்ந்த சூழலில் விமான நிறுவனங்களுடன் அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது’ என்றாா்.

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க

கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - எதிர்கட்சியினர் கேள்வி

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் குறித்து பிரதமர் மோடி பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 13-ஆம் தேதி தொடங்கி, மகா சிவராத... மேலும் பார்க்க

முடி உதிர்வைத் தடுக்க சிகிச்சை: 67 பேர் மருத்துவமனையில் அனுமதி!

பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்ம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உத... மேலும் பார்க்க