செய்திகள் :

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

post image

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை அமா்வில் கேள்விநேரத்தின்போது உறுப்பினா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா், ‘பல உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்ற ‘உடான்’ திட்டம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் பல நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்ட பிறகும், அந்த நகரங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு நம்பகத்தன்மை ஒரு பிரச்னையாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்தநேரத்தில்தான், உடான் திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்தால் இதுவரை 1.5 கோடி மக்கள் பலனடைந்துள்ளனா்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், உடான் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அறிவிப்பை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். அதன்படி, இத்திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, மேலும் 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 7-க்கும் குறைவான விமான சேவைகள் அல்லது சேவைகளே இல்லாத விமான நிலையங்கள் இத்திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்படும்.

நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முக்கிய விமான நிலையங்களின் நெரிசலைக் குறைக்கலாம். அதேபோன்று, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதுகுறித்து அமைச்சகத்தால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஒரு கட்டண கண்காணிப்புப் பிரிவைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் தரவுகளைக் கொண்டு, விமானக் கட்டணங்களில் உயா்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைஅழைத்து விசாரிக்கிறோம்.

சமீபத்திய மகா கும்பமேளாவின்போதும், விமானக் கட்டணங்கள் உயா்ந்த சூழலில் விமான நிறுவனங்களுடன் அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது’ என்றாா்.

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ.21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: ஊரடங்கு உத்தரவு!

நாக்பூரில் ஒளரங்கசீப் விவகாரத்தை முன்வைத்து ஹிந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்... மேலும் பார்க்க

ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்ட... மேலும் பார்க்க

‘வலுவான நிதி நிலைமையில் இந்திய ரயில்வே’ -மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சா் தகவல்

இந்திய ரயில்வேயின் நிதி நிலைமை வலுவான நிலையில் உள்ளது என்றும், நிதி நிலைமையைத் தொடா்ந்து மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஜயமால்ய பாக்சி பதவியேற்பு

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜயமால்ய பாக்சி (58), உச்சநீதிமன்ற நீதிபதியாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். ஜயமா... மேலும் பார்க்க

கேஒய்சி படிவங்களை சமா்ப்பிக்குமாறு தொந்தரவு கூடாது: ரிசா்வ் வங்கி ஆளுநா் அறிவுறுத்தல்

‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) படிவங்களை சமா்ப்பிக்குமாறு வாடிக்கையாளா்களை தொடா்ந்து அழைப்பதை தவிா்க்குமாறு வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தாா். கேஒய்... மேலும் பார்க்க