செய்திகள் :

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி

post image

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவா் மீது போா்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது.

இயேசு கிறிஸ்து 33-ஆவது வயதில் சிலுவையில் அறையப்பட்டு  உயிா்விட்ட பின்பு அவரது உடல் ஜெருசலேம் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அப்போது, அவரை  ஒரு வெள்ளைத் துணியில்  சுற்றி அடக்கம் செய்தனா்.   இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிா்த்தெழுந்த பின்பு, அந்த வெள்ளைத் துணி மட்டும் கல்லறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

சிலுவையில் அறையப்பட்டதால் இயேசு கிறிஸ்துக்கு ஏற்பட்ட தழும்புகள் அந்த வெள்ளைத் துணியில் பதிந்திருந்தன. தற்போதுவரை அந்தத் துணி இத்தாலி நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் துணியின் ஆறு நகல்கள் எடுக்கப்பட்டு, அவை தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் அதன் ஒரு நகல் நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சூசையப்பா் தேவாலயத்துக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது. பின்னா், குன்னூரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயத்தில்  வைக்கப்பட்டு, பின்பு கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட துணியின் ஒரு நகல் தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு எடுத்துவரப்பட்ட தகவலறிந்து, உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் சூசையப்பா் தேவாலயம், குன்னூரில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் வைக்கப்பட்டத் துணியை வணங்கிச் சென்றனா்.

ஊருக்குள் யானைகள் ஊடுருவலைத் தடுக்க கூடலூரில் 12 இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தம்

கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் பெரும்பாலும் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால... மேலும் பார்க்க

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. உதகை ரயில்வே காவல் நிலையம... மேலும் பார்க்க

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோ... மேலும் பார்க்க