செய்திகள் :

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

post image

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நரேந்திரன் (42), வீரேந்திரன் (40) ஆகியோா் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்துள்ளனா்.

இவா்கள் தங்குவதற்காக தோட்ட நிா்வாகம் சாா்பில் மரப்பாலம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இருவரும் திங்கள்கிழமை காலை பணிக்கு வராததால் தேயிலைத் தோட்ட மேலாளா் வீட்டுக்குச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, நரேந்திரன் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து குன்னூா் காவல் துறைக்கு எஸ்டேட் மேலாளா் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் காவல் துணை கண்காணிப்பாளா் ரவி, காவல் ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டதுடன், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா பாா்வையிட்டாா்.

மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சுமாா் இரண்டு கி.மீ. தொலைவுக்கு மலைப் பாதையில் சென்ற மோப்ப நாய் பாதியிலேயே நின்றுவிட்டது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில்,’ நரேந்திரன், வீரேந்திரன் இருவருவம் ஒரே வீட்டில் தங்கி இருந்துள்ளனா். தற்போது, தலைமறைவாக உள்ள வீரேந்திரனை தேடி வருகிறோம். அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகே நரேந்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும் என்றனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

சாலையோரம் நின்ற காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா்-உதகை சாலையோரம் திங்கள்கிழமை காலை காட்டு யானை நின்ால் நடைப்பயிற்சி சென்றவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு, விளை நிலங்க... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம், உதகையில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பிற்பக... மேலும் பார்க்க

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காண... மேலும் பார்க்க