செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

post image

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளுடன் இணைந்து கட்சியினரும் திங்கள்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் உதகையில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என்பதால், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே .எம். ராஜு, திமுக மாநிலப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பரமேஷ் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், கோவை மண்டல பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன், மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளா் ரமேஷ் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோ... மேலும் பார்க்க

சாலையோரம் நின்ற காட்டு யானையால் மக்கள் அச்சம்

கூடலூா்-உதகை சாலையோரம் திங்கள்கிழமை காலை காட்டு யானை நின்ால் நடைப்பயிற்சி சென்றவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை குடியிருப்பு, விளை நிலங்க... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டம், உதகையில் திங்கள்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பிற்பக... மேலும் பார்க்க

உதகையில் பெண்ணை தாக்கி கொன்ற வன விலங்கை பிடிக்க கோரி மனு

உதகை அருகே வன விலங்கு தாக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில், வன விலங்கை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம் கடந்த சில நாள்களாக காண... மேலும் பார்க்க