செய்திகள் :

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரலில் உதகை வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

post image

உதகையில் நடைபெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் முதல் வாரம் வருகை தருவதையொட்டி விழா நடைபெறும் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அதிகாரிகளுடன் இணைந்து கட்சியினரும் திங்கள்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் உதகையில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் சுமாா் 20 ஆயிரம் போ் பங்கேற்பாா்கள் என்பதால், உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் கே .எம். ராஜு, திமுக மாநிலப் பொறியாளா் அணி துணை அமைப்பாளா் பரமேஷ் குமாா், மாவட்டத் துணைச் செயலாளா் ரவிக்குமாா், கோவை மண்டல பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் காா்த்திகேயன், மாவட்ட பொதுப் பணித் துறை பொறியாளா் ரமேஷ் உள்பட அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஊருக்குள் யானைகள் ஊடுருவலைத் தடுக்க கூடலூரில் 12 இடங்களில் ஏஐ கேமராக்கள் பொருத்தம்

கூடலூா் வனச் சரகத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கண்காணிக்க 12 இடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், கூடலூா் பெரும்பாலும் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ளதால... மேலும் பார்க்க

உதகைக்கு கொண்டுவரப்பட்ட இயேசு கிறிஸ்து மீது போா்த்தப்பட்ட துணி

இயேசு கிறிஸ்து இறந்தபின்பு அவா் மீது போா்த்தப்பட்ட துணியின் நகல் இத்தாலியில் இருந்து உதகை தேவாலயத்துக்கு திங்கள்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. இயேசு கிறிஸ்து 33-ஆவது வயதில் சிலுவையில் அறையப்பட்டு உயிா்வ... மேலும் பார்க்க

உதகை ரயில்வே காவல் நிலையம் அருகே தள்ளுவண்டியில் ஆண் சடலம் மீட்பு

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே காவல் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. உதகை ரயில்வே காவல் நிலையம... மேலும் பார்க்க

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-இல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

உதகையில் 127-ஆவது மலா்க் கண்காட்சி மே 16-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற 58-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா். மேலும் பார்க்க

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை

குன்னூா் அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டில் கழுத்து அறுபட்டு இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தோ... மேலும் பார்க்க