செய்திகள் :

எச்-1பி விசா: ஆந்திரத்தில் புதிய வளாகம் திறக்கும் அஸென்ஜர்! 12,000 பேருக்கு வேலை

post image

ஆந்திர மாநிலத்தில், சுமார் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய வளாகத்தைத் திறக்க அஸென்ஜர் நிறுவனம், மாநில அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த, எச்-1பி விசா பெற (நுழைவுஇசைவு) கட்டணம் ரூ.88 லட்சமாக (1 லட்சம் டாலா்) உயர்த்தப்பட்டு, செப்.21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், அஸென்ஜர் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அதனால் அதிகம் பயனடைந்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறையை வெகுவாகப் பாதிக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

துறைமுக நகரமான விசாகப்பட்டினம் அருகே 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை இதற்காக ஒதுக்குமாறு ஆந்திர அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்த கோரிக்கை உடனடியாக ஒப்புதல் வழஙகப்பட்டு, அனுமதிக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அஸென்ஜர் நிறுவனத்தில் மொத்தமுள்ள 7,90,000 ஊழியர்களில் இந்தியர்கள் மட்டும் 3 லட்சம் பேர். சர்வதேச அளவில் இந்த நிறுவனத்தின் ஊழியர்களில் பெரும்பகுதியை இந்தியா கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், இந்த புதிய வளாகத்தைத் தொடங்க நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்யவிருக்கிறது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.

இதுபோலவே, டாடா கன்சல்டன்சி, காக்னிசென்ட் போன்றவையும் இந்தியாவில் புதிய அலுவலகங்கள் திறக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் ஆந்திர அரசு, பெரிய நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை 0.99 பைசாவுக்கு குத்தகைக்கு விடுவது என்ற கொள்கை அறிவிப்பால் பல முன்னணி நிறுவனங்கள் ஆந்திரத்தை நாடத் தொடங்கியிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

லடாக்கில் ‘ஜென் ஸீ’ போராட்டம் எதிரொலி: கடும் கட்டுப்பாடுகள்!

லடாக்கில் மாநில அந்துஸ்து கோரி போராட்டம் நடத்தப்பட்டதன் எதிரொலியாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சு... மேலும் பார்க்க

சர்தார் ஜி - 3! பாக். நடிகையுடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்ஜித்!

பாகிஸ்தான் நடிகையுடனான படத்தில் நடித்தது குறித்த சர்ச்சை விவகாரத்தில் தில்ஜித் தோசஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற ஒரு கான்செர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்ஜித், ``நான் உங்களிடம் சிலவ... மேலும் பார்க்க

ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?

கேரள மாநில பாடத்திட்டத்தில் ஆளுநரை தேர்ந்தெடுக்கப்படாத வெறும் பெயரிலளவிலான நபர் என்ற குறிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரளத்தில் ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவிவரும் நிலை... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்! யாருக்கெல்லாம் நல்வாய்ப்பு?

அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொருட்டு, அதிபர் டிரம்ப் அறிவித்த எச்-1பி விசா கட்டண உயர்வு முதலில் விசா பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வருவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந... மேலும் பார்க்க

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த ... மேலும் பார்க்க

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

புது தில்லி: இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை ... மேலும் பார்க்க