செய்திகள் :

எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சம்! யாருக்கெல்லாம் நல்வாய்ப்பு?

post image

அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் பொருட்டு, அதிபர் டிரம்ப் அறிவித்த எச்-1பி விசா கட்டண உயர்வு முதலில் விசா பெற்று அமெரிக்காவில் வேலை செய்து வருவோருக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்கு வந்து எச்-1பி விசா பெற்று பணியாற்ற, இதுவரை இருந்த கட்டணம் ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயா்த்தும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.

இதைத்தொடா்ந்து, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கு ஓராண்டுக்கு ரூ.88 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும் என அமெரிக்க வணிகத் துறை அமைச்சா் ஹோவா்டு லுட்னிக் தெரிவித்திருந்தார்.

எச்-1பி விசா பெற ஆண்டுக்கு ரூ.88 லட்சம் செலுத்த வேண்டும் என வெளியான இந்த அறிவிப்பு பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால், எச்-1பி விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருவோர் ஆண்டுக்கு ரூ.88 லட்சம் கொடுத்து அமெரிக்க நிறுவனங்கள் பழைய ஊழியர்களை தக்க வைப்பார்களா? புதிய திறமை அதிகம் வாய்ந்த ஊழியர்களை அழைத்து வருவார்களா? நமக்கு வேலை நீடிக்குமா? என்றெல்லாம் ஒரு நாள் முழுக்கக் குழம்பியிருப்பார்கள்.

ஆனால், மறுநாளே, அமெரிக்க அரசு ஒரு விளக்கத்தை வெளியிட்டிருந்தது.

உயா்த்தப்பட்ட எச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணம் ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்டுமே செலுத்த வேண்டும் என அமெரிக்கா விளக்கம் கொடுத்தது.

மேலும், எச்-1பி விசா வைத்திருப்பவா்கள் அல்லது புதுப்பிப்பவா்களுக்கு இந்த கட்டண உயா்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு அடுத்த நாள் அளித்த விளக்கத்தில் கூறியிருக்கிறது.

இதனால், அமெரிக்காவில் ஏற்கனவே எச்-1பி விசா பெற்று பணியாற்றுவோருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, எந்தவொரு அமெரிக்க நிறுவனமும் ரூ.88 லட்சம் செலுத்தி புதிய வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தாது, ஏற்கனவே இருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். இதனால், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்திருப்பதால், இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் பணியாற்றும் எச்-1பி விசா பெற்றிருப்பவர்களுக்கே அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது.

Who will be lucky as H-1B visa fee hiked to Rs. 88 lakhs?

இதையும் படிக்க... பெரும் பணக்காரராக எளிமையான பத்து விஷயங்கள்!

சர்தார் ஜி - 3! பாக். நடிகையுடனான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தில்ஜித்!

பாகிஸ்தான் நடிகையுடனான படத்தில் நடித்தது குறித்த சர்ச்சை விவகாரத்தில் தில்ஜித் தோசஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.மலேசியாவில் நடைபெற்ற ஒரு கான்செர்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்ஜித், ``நான் உங்களிடம் சிலவ... மேலும் பார்க்க

எச்-1பி விசா: ஆந்திரத்தில் புதிய வளாகம் திறக்கும் அஸென்ஜர்! 12,000 பேருக்கு வேலை

ஆந்திர மாநிலத்தில், சுமார் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய வளாகத்தைத் திறக்க அஸென்ஜர் நிறுவனம், மாநில அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க நிறுவ... மேலும் பார்க்க

ஆளுநர் என்பவர் முதலாளி அல்ல! கேரளத்தில் ஆளுநரை வம்பிழுக்கும் மாநில அரசு?

கேரள மாநில பாடத்திட்டத்தில் ஆளுநரை தேர்ந்தெடுக்கப்படாத வெறும் பெயரிலளவிலான நபர் என்ற குறிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கேரளத்தில் ஆளுங்கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவிவரும் நிலை... மேலும் பார்க்க

மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!

மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக செப். 26 (நாளை) ஒருநாள் பயணமாக பிகார் செல்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. பிகார் காங்கிரஸ் தலைவர் ஷகீல் அகமது கான் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த ... மேலும் பார்க்க

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

புது தில்லி: இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில... மேலும் பார்க்க