செய்திகள் :

எத்தனால் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! 12 பேர் கைது!

post image

தெலங்கானாவின் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையால் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில், எத்தனால் ஆலை அமைக்க தெலங்கானா அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 7 முதல் 8 கிராமங்களைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள், ராஜோலி மண்டல் பகுதியில் நேற்று (ஜூன் 4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில், அந்த ஆலையின் நிறுவனத்தால், அமைக்கப்பட்டிருந்தத் தற்காலிக முகாம்கள் மற்றும் சரக்குப் பெட்டிகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அங்கு உடனடியாக காவல் துறையினர் விரைந்து வன்முறையைக் கட்டுப்படுத்தினர்.

இந்நிலையில், முகாம்களுக்கு தீ வைத்தது மற்றும் கலவரம் உண்டாக்கியது, ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜோலி காவல் நிலையத்தில் ஆலையின் நிர்வாகத்தினர் புகாரளித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, அம்மாவட்டத்தின் பெத்தா தன்வாடா கிராமத்துக்கு அருகில் சுமார் 35 முதல் 40 ஏக்கர் பரப்பளவில், தானியம் சார்ந்த எத்தனால் ஆலை அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று அனுமதி பெற்றுள்ளது.

இதுகுறித்து, அங்குள்ள கிராமவாசிகளிடம் அந்த நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க