செய்திகள் :

எம்.ஜி.ஆர் கொடுத்த பிளாங்க் செக்; ஜெயலலிதாவின் பிரச்சார திட்டமிடல்! - யார் இந்த செங்கோட்டையன்?

post image

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "புரட்சித் தலைவர், அம்மாவின் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓபிஎஸ் - செங்கோட்டையனுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்திக்கவுள்ளோம்" என்றார்.  

ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன்
ஓ.பி.எஸ், செங்கோட்டையன், தினகரன்

இந்நிலையில் ஏற்கனவே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிய செங்கோட்டையனை, நேற்று(அக்.31)அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

யார் இந்த செங்கோட்டையன்?

1971 வரை திமுக-வில் இருந்த செங்கோட்டையன், 1972-ல் எம்.ஜி.ஆர் தலைமையில் ஆன அதிமுக-வில் இணைந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான இவர் கட்சியில் இணையும்போதே எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய மாவட்டதிற்கு உட்பட்ட தொகுதிகளில் கட்சி ரீதியிலான செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆரின் கவனத்தை ஈர்த்து நற்பெயரைப் பெற்றிருக்கிறார்.

1975-ல் கோவை மாவட்டத்தில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றிருக்கிறது. அந்தப் பொதுக்குழு கூட்டத்திற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன்  பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் நெருக்கம்

அந்தக் பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக முடித்ததற்காக செங்கோட்டையனுக்கு எம்.ஜி.ஆர் ஒரு பிளாங்க் செக்கை  விழா மேடையிலேயே கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை செங்கோட்டையன் வாங்க மறுத்திருக்கிறார். இப்படி அதிமுக-வின் தீவிர தொண்டனாக இருந்திருக்கிறார் செங்கோட்டையன்.

செங்கோட்டையன் - எம்.ஜி.ஆர்

அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து 1977-ல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். தொடர்ந்து 1980ல் கோபிச்செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகிறார்.

9 முறை எம்.எல்.ஏ

1980-ல் இருந்து தற்போது வரை அதே தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். இடையில் 1996ல் மட்டும் தோல்வியை தழுவினார். மேலும் 2001 தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார். தற்போதைய எம்.எல்.ஏவும் இவர் தான்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனை போன்று அதிக தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் இருக்கிறார், தமிழக அரசியல் களத்தில். எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா பொதுச்செயலாளராக பதவியேற்றப் பிறகு ஜெயலலிதாவிற்கும் ஒரு அபிமான நபராகத்தான் செங்கோட்டையன் திகழ்ந்திருக்கிறார். 

ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பவர்

எம்.ஜி.ஆர் உடன் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வது, ஜெயலலிதாவின் பிரசார திட்டமிடலை வகுப்பது என கட்சி தலைமைக்கு பல்வேறு விதங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்தே பல உயரங்களை செங்கோட்டையன் எட்டினார். போக்குவரத்து (1991–1996) விவசாயம் (மே 2011–நவம்பர் 2011) தகவல் தொழில்நுட்பம் (நவம்பர் 2011–ஜனவரி 2012) வருவாய் (ஜனவரி 2012–ஜூலை 2012) பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் & விளையாட்டு (டிசம்பர் 2016–மே 2021) போன்ற துறைகளில் அமைச்சர் பதவி வகித்திருக்கிறார்.

செங்கோட்டையன் - ஜெயலலிதா
செங்கோட்டையன் - ஜெயலலிதா

அதுமட்டுமின்றி கட்சியில் முடிவெடுக்கும் சில பொறுப்புகளைக்கூட செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா வழங்கி இருக்கிறார். இப்படி எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நெருக்கமான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கும் சீனியர். 2014-ல் ஜெயலலிதா சிறை செல்ல நேரிடும்பொழுது அப்போது செங்கோட்டையனின் பெயர்தான் முதல்வர் பதவிக்கு அதிகமாக அடிபட்டிருக்கிறது. ஆனால் அப்போது அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை. ஓபிஎஸ் தான் முதல்வர் ஆனார்.

கட்சியில் சீனியர்...

அதன்பின் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக பிளவுற்றப்போது சசிகலா தலைமையில் கூவத்தூரில் ஆலோசனை நடைபெற்றபோதுகூட கட்சியில் சீனியர்... பலமுறை தேர்தலில் வெற்றிப்பெற்றவர், அரசியல் அனுபவம் கொண்டவர் அவருக்குத்தான் முதல்வர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டதாக தகவல் உண்டு. ஆனால் முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது எடப்பாடி பழனிசாமிக்குத்தான். கொங்கு பெல்ட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக இருக்கும் செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக போர்கொடியை தூக்கியிருக்கிறார். 

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பிரிந்திருக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கி தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்திருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து இன்று காலை 11 மணிக்கு பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார். எடப்பாடி உட்பட அதிமுக-வின் முக்கிய தலைகள் அத்தனை பேரின் கவனமும் செங்கோட்டையன் என்ன பேசப் போகிறார் என்பதிலேயே இருக்கும். அதிமுக-வின் சூப்பர் சீனியர், என்ன பேசப்போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

SIR Row : 'கொளத்தூரில்19476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்கள்’ - BJP ஏ.என்.எஸ் பிரசாத் | களம் 03

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)செய்தி தொடர்பாளர்: தமிழக பாஜககட்டுரையாளர்: ஏ.... மேலும் பார்க்க

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்... மேலும் பார்க்க

நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்ட... மேலும் பார்க்க

``திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாள்கள் தான், கவுண்டவுன் ஸ்டார்ட்'' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு அருகாமையில் உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது சதய விழாவின் முக்கிய நிகழ்வா... மேலும் பார்க்க

10 பேர் பலி: ``இது முதல்முறையல்ல, அரசின் அலட்சியமே'' - ஆந்திரா நெரிசல் குறித்து ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுகா பகுதியில் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினர். அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 ப... மேலும் பார்க்க