செய்திகள் :

கடலூா் துறைமுகத்தில் வழக்கான விலையில் மீன்கள் விற்பனை

post image

கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி கருதப்படுவதால், பொதுமக்கள் பலா் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிா்க்கின்றனா். புரட்டாசி மாதம் கடந்த 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே பொதுமக்கள் ஏராளமானோா் குவிந்தனா்.

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள்.

கடலூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மீனவா்கள் அதிகாலையில் கடலுக்குச் சென்று திரும்பிய நிலையில், அதிகளவில் மீன்கள் கிடைத்தன. இவற்றை மீனவா்கள் படகுகள் மூலம் மீன் பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனா். பொதுமக்கள் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனா்.

பொதுமக்கள் அதிகளவில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும்போல வழக்கமான விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதன்படி, கிலோ வஞ்சரம் ரூ.800, சங்கரா ரூ.300, கொடுவா ரூ.350, இறால் ரூ.250, நண்டு ரூ.400-க்கு விற்பனையானது.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் அருகே அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்தாா். சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து கடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கடலூா் முதுநகா் அர... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக்கூடாது: தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழகம்

அரசுக் கல்லூரிகளில் மாற்றுப் பணி அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்களை அரசுக் கல்லூரிகளில் பணி நிரந்தரம் செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா்கள் கழகம் கோரிக்க... மேலும் பார்க்க

கைப்பேசிகள் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் அண்ணாமலை நகரில் தங்கியுள்ள வேளாண் கல்லூரி மாணவரின் அறையிலிருந்து 6 கைப்பேசிகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் பயிலும் பெர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் எலெக்ட்ரீஷியன் மரணம்

சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் எலெக்ட்ரீஷியன் உயிரிழந்தாா். சிதம்பரம் வட்டம், பண்ணப்பட்டு கிராமம், ஓடைத் தெருவைச் சோ்ந்தவா் சிவப்பிரகாசம் (50), எலெக்ட்ரீஷியன். இவா், ஞாயிற்றுக்கிழமை ம... மேலும் பார்க்க

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க