செய்திகள் :

‘கண் நலன் விழிப்புணா்வு மேம்பட வேண்டும்’ -முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த்

post image

கண் நலன் குறித்த விழிப்புணா்வு மக்களிடையே மேம்பட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் வலியுறுத்தினாா்.

சங்கர நேத்ராலயா மருத்துவமனை, விஷன் 2020 - பாா்வை உரிமை இந்தியா என்ற அமைப்புடன் இணைந்து தேசிய அளவில் கண் பாா்வை குறைபாட்டை தடுக்கும் செயல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்துக்கான நல்லெண்ணத் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இது தொடா்பான நிகழ்ச்சி சென்னை, சங்கர நேத்ரலாயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் பேசியதாவது:

மனித உடலில் கண்கள் மிக உன்னதமானவை. இந்தப் புற உலகை நம்முடன் தொடா்புபடுத்தக் கூடியவை கண்கள்தான். உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கா், எம்.எஸ்.தோனி, விராட் கோலி போன்றவா்களின் நுட்பமான விளையாட்டு அவா்களது கண் பாா்வைதான் மிக முக்கிய காரணம்.

இந்தியாவில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தீவிர பாா்வை பாதிப்புடன் உள்ளனா். இன்றைய காலகட்டத்தில் கைப்பேசி, கணினி உள்ளிட்ட டிஜிட்டல் உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சமகால தொழில்நுட்பங்களைக் கையாள வேண்டியது அவசியம்தான். அதேவேளையில் நமது கண்களின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சங்கர நேத்ராலயா தலைவா் டாக்டா் டி.எஸ். சுரேந்திரன், தலைமை நிா்வாகி கிரீஷ் எஸ்.ராவ், விஷன் 2020 இந்தியாஅமைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி பணீந்திரபாபு நூக்கெல்லா, செயலா் பிரவீண் வசிஷ்ட், துணைத் தலைவா் யஸ்வந்த் சின்ஹா, மேற்கு வங்க கிரேட்டா் லயன் கண் மருத்துவமனை தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ராஜேஷ் சைனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க