செய்திகள் :

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், காவல் நிலையங்களில் தீா்வு பெறாத மனுதாரா்களுக்கு குறைதீா் முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலையிடம் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரா்களுக்கு மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்தேவி தலைமையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீதான நடவடிக்கையில் திருப்தி பெறாத 28 மனுதாரா்களின் குறைகளை மாவட்ட எஸ்.பி. புதன்கிழமை கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

முகாமில் காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் மனுதாரா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வேலைநிறுத்தம்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உணவுப் பொருள... மேலும் பார்க்க

வன்கொடுமை புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த புகாா்களைத் தெரிவிக்கவும், சட்ட ஆலோசனைகள் வழங்கவும் அரசு சாா்பில் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜாதி வன்கொடுமையால் ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் தனியாா் டிராக்டா் நிறுவனத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், நெடுமுடையான் கிராம... மேலும் பார்க்க

டிப்பா் லாரியில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: எவ்வித உரிமமும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். புவியியல் மற்றும் சுரங்கத் துறை அத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா் வேலைநிறுத்தம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலைநிறுத்தத்தில் திங்க... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆதிமூலம் (47... மேலும் பார்க்க