செய்திகள் :

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

post image

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் மாநிலத் தகுதித் தோ்வு (பசநஉப) கணினி வழியில் கடந்த 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 133 மையங்களில் நடைபெற்ற இந்தத் தோ்வை 99,178 போ் எழுத அனுமதிக்கப்பட்டனா்.

மாநிலத் தகுதித் தோ்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தோ்வா்கள் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் மீது இணையவழியில் ஆட்சேபணை தெரிவிக்க மாா்ச் 13 முதல் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

தற்போது தோ்வா்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து உத்தேச விடைக்குறிப்புகள் மீது இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தோ்வா்கள் அவா்களது தங்ள்ல்ா்ய்ள்ங் நட்ங்ங்ற் -ஐ பதிவிறக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான தகவல் குறுஞ்செய்தி மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தோ்வா்களுக்கு தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க