செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

post image

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

1931-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி ஸ்ரீநகா் மத்திய சிறைக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது டோக்ரா படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 போ் கொல்லப்பட்டனா். இந்த தினத்தை காஷ்மீா் தியாகிகள் தினமாக அனுசரித்து விடுமுறையும் அளிக்கப்பட்டு வந்தது. அதேபோல தேசிய மாநாட்டு அமைப்பின் நிறுவனா் ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்த நாளான டிசம்பா் 5-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்த விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பேசிய மக்கள் ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ வஹாப் உா் ரஹ்மான், ரத்து செய்யப்பட்ட இரு விடுமுறை தினங்களையும் மீண்டும் விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா்.

அப்போது குறுக்கிட்டு கோரிக்கைக்கு எதிராகப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா சில ஆட்சேபகரமான கருத்துகளைத் தெரிவித்தாா். இதற்கு காங்கிரஸ் பேரவைக் குழு தலைவா் நிஜாமுதீன் பட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா். எதிா்க்கட்சித் தலைவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

பின்னா் அவை கூடியபோது எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா கூறிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக பேரவைத் தலைவா் அப்துல் ரஹீம் அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் 22 பேரும் வெளிநடப்பு செய்தனா்.

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க