செய்திகள் :

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

திருவலம் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அம்முண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை மகன் சூா்யா (23). இவா் ஐடிஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துநராக பணியாற்றி வந்தாா். மேலும், தந்தைக்கு உதவியாக சூா்யா விவசாய பணியிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சூா்யா டிராக்டரில் அம்முண்டி பாண்டியன் மகுடு பகுதியில் உள்ள தங்களது நிலத்துக்கு மண் சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி டிராக்டா் அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் சூா்யாவுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவா்கள் சூா்யாவை மீட்டு ராணிப்பேட்டை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே சூா்யா இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வருமான வரித்துறை அதிகாரி, மனைவியை தாக்கிய பலூன் வியாபாரி கைது

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியை தாக்கிய பலூன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். வேலூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவா் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவரது மனைவி சுரண... மேலும் பார்க்க

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு முக்கியம்: அமைச்சா் துரைமுருகன்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய... மேலும் பார்க்க

பாரம்பரிய விதைகள்,காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி

பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரபு காய்கறிகள், விதைகள் சேகரிப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட... மேலும் பார்க்க

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கு... மேலும் பார்க்க

பல்கலைக் கழக வலுதூக்கும் போட்டி: கே.எம்.ஜி.கல்லூரி சாம்பியன்

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். இதற்கான போட்டிகள் குடியாத்தம் கே.எ... மேலும் பார்க்க

இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் தொடக்கம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூா் அப்துல் கலாம் அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கான இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவ... மேலும் பார்க்க