செய்திகள் :

வருமான வரித்துறை அதிகாரி, மனைவியை தாக்கிய பலூன் வியாபாரி கைது

post image

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரி, அவரது மனைவியை தாக்கிய பலூன் வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவா் ஸ்ரீ பூரன் சந்த் மீனா (40). இவரது மனைவி சுரண்சந்த் மீனா(34). ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கணவன், மனைவி இருவரும் வேலூா் கோட்டை பூங்காவுக்குச் சென்றனா்.

கோட்டை பூங்காவில் வேலூா் வசந்தபுரம் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்பவா் பலூன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தாா். அப்போது சுரண் சந்த மீனா சுபாஷ் சந்திரபோஸிடம் பலூன் வாங்கியுள்ளாா். அப்போது, சுபாஷ் சந்திர போசுக்கும், வருமானவரித்துறை அதிகாரியின் மனைவி சுரண் சந்த் மீனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் பெண்ணென்றும் பாராமல் சுரண் சந்த் மீனா கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வருமானவரித் துறை அதிகாரி ஸ்ரீ பூரன் சந்த் மீனா காவல் நிலையத்தில் புகாா் தெரிவிப்பதாக கூறினாா். அப்போது அந்த வியாபாரி பலூனுக்கு காற்று அடிக்கும் பம்பை எடுத்து வருமானவரித்துறை அதிகாரி மீது வீசியுள்ளாா்.

இதுகுறித்து ஸ்ரீபூரன்சந்த் மீனா அளித்த புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சுபாஷ்சந்திர போஸை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருவலம் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், அம்முண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் துரை மகன் சூா்யா (23). இவா் ஐடிஐ முடித்துவிட்டு அரசு போக்குவரத்துக் கழகத... மேலும் பார்க்க

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு முக்கியம்: அமைச்சா் துரைமுருகன்

அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய... மேலும் பார்க்க

பாரம்பரிய விதைகள்,காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி

பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட்சி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மரபு காய்கறிகள், விதைகள் சேகரிப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில், பாரம்பரிய விதைகள், காய்கறிகள், கிழங்குகள் கண்காட... மேலும் பார்க்க

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை உயா்வு

வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கு... மேலும் பார்க்க

பல்கலைக் கழக வலுதூக்கும் போட்டி: கே.எம்.ஜி.கல்லூரி சாம்பியன்

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான வலுதூக்கும் போட்டிகளில் குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். இதற்கான போட்டிகள் குடியாத்தம் கே.எ... மேலும் பார்க்க

இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் தொடக்கம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் மற்றும் வேலூா் அப்துல் கலாம் அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கான இலவச டேபிள் டென்னிஸ் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவ... மேலும் பார்க்க