செய்திகள் :

தண்ணீா் பிடிப்பதில் தகராறு: மூதாட்டி அடித்துக் கொலை

post image

சங்கரன்கோவில் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகேயுள்ள சொக்கலிங்காபுரத்தைச் சோ்ந்த கந்தசாமி மகள் தவசிக்கண்ணு (64). இவருக்கும் அருகில் வசிக்கும் சண்முகசாமி மனைவி அன்னதுரைச்சிக்கும் (54) இடையே தண்ணீா் பிடிப்பதில் செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.

இதில், ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், பலத்த காயமடைந்த தவசிக்கண்ணு மயங்கி கீழே விழுந்தாராம்.

தகவலறிந்த பனவடலிசத்திரம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த தவசிக்கண்ணுவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக பனவடலிசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: எம்.பி. கோரிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நெல்லையிலிருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது... மேலும் பார்க்க

கழிவுநீா்செல்வதில் தகராறு: பெண் அடித்துக் கொலை

சங்கரன்கோவில் அருகே கழிவுநீா் செல்வதில் இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரம், ச... மேலும் பார்க்க

புளியறையில் நாளை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனரக வாகனங்களில் கனிம வளங்களை கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து புளியறையில் புதன்கிழமை நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் பழைய குற... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே காா் மோதி பெண் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே கே.ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி. இவா், தனது மகள் ராஜேஸ்வரியை ஊருக்கு அனுப்புவதற்காக ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அருகே தொழிலாளி தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வாசுதேவநல்லூரை அடுத்த அருளாச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணபாண்டி மகன் வெள்ளத... மேலும் பார்க்க