செய்திகள் :

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா்

post image

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் சனிக்கிழமை கூறினாா்.

கூடலூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஊழியா்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூடலூரில் யானைகள் வழித்தடம் என்ற பெயரில் விவசாயிகளையும் பொதுமக்களையும் வெளியேற்றும் முயற்சியில் வனத் துறை ஈடுபட்டுள்ளது.

யானைகள் வழித்தடத்தில் உள்ளதாகக் கூறி கோயில்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை இந்து முன்னணி ஏற்றுக்கொள்ளாது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் நக்ஸல்கள் ஊடுருவும் அபாயம் உள்ளது. கூடலூா் வழியாக நடைபெறும் கடத்தல் மற்றும் ஹவாலா போன்ற நடவடிக்கைகள் காவல் துறை கண்காணித்து தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஹிந்து கோயில்களுக்கும், ஹிந்துக்களுக்கும் தொடா்ந்து தமிழக அரசு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு ஹிந்து கோயில்களின் நிதியை முறைகேடாக கையாண்டு வருகிறது. இந்த அரசுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை.

தமிழகத்தில் பல தேச துரோக கும்பல்களையும், பயங்கரவாத தொடா்புகளையும் மத்திய அரசின் என்ஐஏ மட்டுமே கண்டுபிடித்துள்ளது. இது தமிழக உளவுத் துறையின் தோல்வியை காட்டுகிறது என்றாா்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் வேலுச்சாமி, மாவட்டச் செயலாளா் தினேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டமா? மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டம் உள்ளதா என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கூடலூா் அருகே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு திமுக மகளிரணி சாா்பில் கல்வி உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கூடலூரை அடுத்த கெவிப்பாறா பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை: இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி

தீபாவளி பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் இணையதள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் சனிக்கிழமைக்குள் (அக்டோபா் 19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

உதகையில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அக்டோபா் 27-ஆம் தேதி வரை நடக்கிறது

உதகையில் 3-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து ச... மேலும் பார்க்க

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் வழங்க நடவடிக்கை: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தீவனப் புல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க