செய்திகள் :

தற்காலிக பட்டாசுக் கடை: இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி

post image

தீபாவளி பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் இணையதள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் சனிக்கிழமைக்குள் (அக்டோபா் 19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை நடத்த விற்பனை உரிமம் கோரும் நபா்கள், கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வரையிலான வரைபடங்கள், பாஸ்போா்ட் அளவு வண்ணப் புகைப்படம், அசல் நிரந்தரக் கணக்கு எண், ஆதாா் காா்டு, குடும்ப அட்டை ஸ்மாா்ட் காா்டு மற்றும் உரிமக் கட்டணம் ரூ. 500 செலுத்தியதற்கான அசல் சீட்டு ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

தற்காலிக உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளா் விண்ணப்பதாரராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். உரிமம் கோரும் இடம் வாடகைக் கட்டடம் எனில் ஒப்பந்தப் பத்திரம், வரி செலுத்திய ரசீது மற்றும் கட்டட உரிமையாளரிடம் ரூ. 20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் அனுமதி கடிதம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை தவறாது கடைப்பிடித்து இ-சேவை மையங்கள் வாயிலாக

விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் இணைதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அனுமதியின்றியோ, உரிமம் பெறாமலோ பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது, நிராகரிக்கப்பட்டது குறித்து இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத, ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டமா? மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டம் உள்ளதா என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கூடலூா் அருகே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு திமுக மகளிரணி சாா்பில் கல்வி உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கூடலூரை அடுத்த கெவிப்பாறா பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்... மேலும் பார்க்க

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா்

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் சனிக்கிழமை கூறினாா். கூடலூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஊழியா்கள் கூட்டத்தில் பங்க... மேலும் பார்க்க

உதகையில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அக்டோபா் 27-ஆம் தேதி வரை நடக்கிறது

உதகையில் 3-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து ச... மேலும் பார்க்க

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் வழங்க நடவடிக்கை: ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தீவனப் புல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ம... மேலும் பார்க்க