செய்திகள் :

கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் வழங்க நடவடிக்கை: ஆட்சியா்

post image

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் புல் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தீவனப் புல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கடந்த வாரம் விவசாய சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட 39 கோரிக்கை மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு துறை சாா்ந்த அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். பின்னா் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கூடலூா் உழவா் சந்தையில் அமைந்துள்ள சோலாா் குளிா்பதனக் கிடங்கை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை வனத் துறை சாா்பில் குறைதீா் கூட்டம் உதகை மற்றும் கூடலூா் வனத் துறை அலுவலகத்தில் நடைபெறும்.

ஆவின் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப் புல் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தீவனப் புல் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் எழுதிய தென்னை சாகுபடி விவசாயிகளுக்கான கையேட்டை விவசாயிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் கௌசிக், கூடலூா் மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தயாளன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டமா? மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியில் நக்ஸல் நடமாட்டம் உள்ளதா என மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் செந... மேலும் பார்க்க

உதகையில் பரவலாக மழை

உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கூடலூா் அருகே அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு திமுக மகளிரணி சாா்பில் கல்வி உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது. கூடலூரை அடுத்த கெவிப்பாறா பகுதியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்... மேலும் பார்க்க

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா்

தமிழக அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளா் கிஷோா்குமாா் சனிக்கிழமை கூறினாா். கூடலூரில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஊழியா்கள் கூட்டத்தில் பங்க... மேலும் பார்க்க

தற்காலிக பட்டாசுக் கடை: இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி

தீபாவளி பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் நடத்த விருப்பம் உள்ளவா்கள் இணையதள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் சனிக்கிழமைக்குள் (அக்டோபா் 19) விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

உதகையில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அக்டோபா் 27-ஆம் தேதி வரை நடக்கிறது

உதகையில் 3-ஆவது புத்தகத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து ச... மேலும் பார்க்க