செய்திகள் :

'தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் மோடிக்கு விளக்குவார்கள்'- எம்.பி கனிமொழி கண்டனம்

post image

பிரதமர் மோடி பீகாரில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாகப் பேசியிருக்கிறார்.

இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எம்.பி கனிமொழியும் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

"வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை.

கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும்.

அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.

கனிமொழி
கனிமொழி

தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்" என்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதிமுக: 9 மாத பனிப்போர்; திடீர் டெல்லி பயணங்கள்! - செங்கோட்டையனின் நீக்கமும் பின்னணியும்!

'செங்கோட்டையன் நீக்கம்!'அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகியிருக... மேலும் பார்க்க

``இனவெறி பாகுபாட்டின் உச்சம்'' - மோடியின் பீகார் பிரசார பேச்சுக்கு சீமான் கண்டனம்

பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில், பா.ஜ.க, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள... மேலும் பார்க்க

சென்னை: எண்ணூர் பெரிய குப்பத்தில் கரை ஒதுங்கிய 4 இளம் பெண்களின் சடலம்; பின்னணி என்ன?

வடசென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் நான்கு இளம் பெண்களின் உடல்கள் தற்போது கரை ஒதுங்கியுள்ளன.கரை ஒதுங்கிய சடலங்களை அந்தப் பகுதியிலிருந்த மீனவர்கள் பார்த்தவுடன் எண்ணூர் போலீசாருக்குத் தகவல் ... மேலும் பார்க்க

``மொத்த விளக்கத்தையும் நாளை தருகிறேன்'' - அதிமுகவில் இருந்து நீக்கியது குறித்து செங்கோட்டையன்

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் செங்கோட்டைய... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்; எடப்பாடி பழனிசாமி அதிரடி; காரணம் என்ன?

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி வந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

தெலங்கானா அமைச்சராக அசாருதீன் பதவியேற்பு; `சமூக நீதியா? இடைத்தேர்தல் நகர்வா?' - பாஜக விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் கேப்டனுமான முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.முன்னதாக, சூதாட்ட குற்றச்சாட்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (... மேலும் பார்க்க