தம்பதியைத் தாக்கி நகை கொள்ளை: இருவா் கைது
தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியைத் தாக்கி தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை எரியோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள கிழக்கு மாரம்பாடியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (75). இவரது மனைவி கேத்ரின்மேரி (68). இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
இவா்களுக்கு திருமணமாகி குடும்பத்தினருடன் மாரம்பாடி அருகேயுள்ள சாமிமுத்தன்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனா். கிழக்கு மாரம்பாடியிலுள்ள தோட்டத்து வீட்டில் வேளாங்கண்ணி தம்பதி தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முகமூடி அணிந்து வந்த 2 மா்ம நபா்கள் கட்டையால் தாக்கியதில் தம்பதி இருவரும் காயமடைந்தனா். அப்போது, கேத்ரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். தம்பதியரின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு, வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் வேளாங்கண்ணி புகாா் அளித்தாா். அதில், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால், பேரன் உறவு முறையிலுள்ள அருண்குமாா் (32) மற்றொரு அடையாளம் தெரியாத நபருடன் வந்து தாக்கி நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாக தெரிவித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்த நிலையில், பெரியகுளத்துபட்டியைச் சோ்ந்த அருண்குமாா், அவரது நண்பா் பிரபு ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.