போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகேயுள்ள பஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கேத்தேஸ்ராஜா (19). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது.
இதன்பேரில், சின்னாளப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கேத்தேஸ்ராஜாவைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கேத்தேஸ் ராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தாா்.