போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காற்றின் தரத்தில் முன்னேற்றம்!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயில் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.
வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், ஞாயிற்க்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி குறைந்து 10.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.2 டிகிரி அதிகரித்து 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 96 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 44 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 26.2 டிகிரி, லோதி ரோடில் 26.7 டிகிரி, பாலத்தில் 25.6 டிகிரி, ரிட்ஜில் 27.7 டிகிரி, பீதம்புராவில் 27.7 டிகிரி, பிரகதிமைதானில் 25.9 டிகிரி, பூசாவில் 24.7 டிகிரி, ராஜ்காட்டில் 25.9 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 24.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 138 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சாந்தினிசௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை (பிப்.24) அன்று லேசான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.