செய்திகள் :

தாயின் கண்முன்னே 5 மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

post image

மத்திய பிரதேசத்தில் தாயின் கண்முன்னே அவரது மகனின் தலையைத் துண்டித்த மனநலம் பாதித்தவரின் வெறிச்செயல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் காலு சிங் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்த மகேஷ் என்பவர், காலு சிங்கின் 5 வயது மகன் விகாஸை திடீரென ஈட்டிபோன்ற ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமையில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறுவனின் தலையை தாயின் கண்முன்னேயே துண்டித்துவிட்டு, உடலை மட்டும் தனது தோளில் தூக்கிப்போட்டு சென்றுள்ளார், மகேஷ்.

மகேஷின் இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார், கத்திக் கூச்சலிட்டதால் அப்பகுதியினர் ஒன்றுகூடினர்.

மகேஷின் வெறிச்செயலைக் கண்ட அப்பகுதி மக்கள், மகேஷை அடித்து உதைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன், காயமடைந்த மகேஷை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

மகேஷ் குறித்து விசாரணை நடத்தியதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த 4 நாள்களாக அவர் வீட்டுக்குச் செல்லவில்லை என்றும் மகேஷின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி, இந்தச் சம்பவத்துக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்னதாகத்தான் அருகிலிருந்த ஒரு கடையில் மகேஷ் திருட முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.

மகேஷை தெரியாது என்றும், இதுவரையில் அவரை பார்த்தது கிடையாது என்றும் விகாஸின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:போர் முடிந்த பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

5 Y/O Boy Beheaded In Front Of Mother In MP

சாலைத் தடுப்பில் மோதி 5 மாணவர்கள் பலி!

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் கார் விபத்தில் 5 பேர் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர்... மேலும் பார்க்க

பிகாரில் 2வது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா!

பிகாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்துரையாடினார். இந்தாண்டு இறுதியில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் தலைவர்கள் பி... மேலும் பார்க்க

பாஜக அமைச்சர் மீது முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

மகாராஷ்டிர அமைச்சர் ஜெயகுமார் ராவல், தங்களது பாரம்பரிய நிலத்தை சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமித்துள்ளதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மகாராஷ்டிரத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது. சுக்மா மாவட்டத்தில், கொய்மெண்டா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியி... மேலும் பார்க்க

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

2029-க்குள் மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டத்தின் முழுப் பகுதியும் செயல்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அஸ்வினி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று(சனிக்கிழமை) தொடக்கிவைத்தார். இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட்... மேலும் பார்க்க