செய்திகள் :

திண்டுக்கல்: சமூக விரோதிகளின் கூடாரமாகும் நிலக்கோட்டை நூலகம்; கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

post image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள அரசு நூலகத்தில் தினமும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், அரசு தேர்வுகளுக்கும், தனி தேர்வுகளுக்கும் படித்து வருகிறார்கள்.

தற்போது இந்த இடம் குடிகாரர்களின் அராஜகம் அதிகமாகி வருவதால் மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து நூலகத்திற்கு வரும் இளைஞர்கள் நம்மிடையே பேசும் போது, "இங்குள்ள சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது.

மழைக்காலங்களில் நூலகத்தின் வளாகங்கள் முழுவதும் மழைநீர் ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்தச் சமயங்களில் பள்ளங்களைக் கடந்து வருவதே மிகவும் சவாலானதாக இருக்கிறது.

நூலகத்திற்குப் பக்கத்தில் பூ மார்க்கெட் இருப்பதனால் அங்குக் கொட்டப்படும் கழிவுகள், நெகிழி குப்பைகளின் துர்நாற்றமும் இந்தப் பகுதி முழுக்கவே வீசுகிறது.

நூலகத்தில் படிக்கும் மாணவர்கள்
நூலகத்தில் படிக்கும் மாணவர்கள்

அதுமட்டுமில்லாமல் இரவில் இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் குடித்துவிட்டு இங்கேயே பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர்.  ஒவ்வொரு நாள் காலையில் நாங்களே அந்தப் பாட்டில்களை அப்புறப்படுத்துகிறோம்.

இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் குடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதனால் இங்குப் படிக்க வந்த பெண்களின் பெற்றோர்கள், அவர்களைப் படிக்க அனுப்புவதில்லை.

இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் இரண்டு முறை புகார் மனு எழுதிக் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குடிகாரர்களின் கூடாரமாகவும் மாறி வருகிறது” என வேதனையோடு தெரிவித்தனர்.

அரசு நூலகத்தின் அவல நிலை
அரசு நூலகத்தின் அவல நிலை

இது குறித்து வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்ட போது, “உடனடியாக நடவடிக்கை எடுத்து நூலகத்தின் சுற்றுப்புறங்களில் இருக்கும் குப்பை மற்றும் சகதிகளை அகற்றி தூய்மை செய்தனர்" என்றார், மது அருந்துவோரின் செயல்பாடுகளைப் பற்றி கேட்கும் பொழுது, "அதற்கு நூலகத்தின் நிர்வாகம்தான் சிசிடிவி கேமரா வைத்து கண்காணித்து காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்” என்றார் வட்டாட்சியர்.

கோவை: இரவின் மின்னொளியில் 10.1 கி.மீ நீளமுள்ள புதிய ஜி.டி. நாயுடு மேம்பாலம் | Exclusive Drone Shots

ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி.டி.நாயுடு மேம்பாலம்ஜி... மேலும் பார்க்க

"நீதிபதி சனாதனத்தை அவமதிப்பதை ஏற்க முடியாது" - தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீச முயன்ற நபர் பேச்சு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று காலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் கஜுராஹோ கோயில் வளாக... மேலும் பார்க்க

தேமுதிக பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்: முதல்வர் ஸ்டாலின் டு கமல் வரை இரங்கல்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் கட்சியின் பொருளாளர் சுதீஷின் தாயார் திருமதி அம்சவேணி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி அண்மைக்காலமாக ம... மேலும் பார்க்க

கோவையின் புதிய அடையாளம்: 10 கி.மீ நீளம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மேம்பாலம்! | Drone Shots

கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின் புதிய மேம்பாலம்கோவையின்... மேலும் பார்க்க

தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக்குளிக்க முயற்சி!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெ... மேலும் பார்க்க

கொல்கத்தா: பாஜக எம்.பி மீது கல்வீச்சு; ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதி; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு மீது உள்ளூர்வாசிகள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொ... மேலும் பார்க்க