செய்திகள் :

Rain Update: அக்டோபர் 10 வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

post image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்வதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன்படி, ``தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடற்கரையில் வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.

வானிலை ஆய்வு மையம் தகவல்
வானிலை ஆய்வு மையம் தகவல்

அதனால் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், சில மாவட்டங்களில் அக்டோபர் 10 வரை பலத்த மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் நாளை காலை வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்டோபர் 8 முதல் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை படிப்படியாக 2°C–3°C குறையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

சென்னையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°C ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே தி... மேலும் பார்க்க

இந்த வாரமும் கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மைய அறிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரமும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கைப்படி, இந்த வாரம் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 17 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ... மேலும் பார்க்க

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீ... மேலும் பார்க்க

வானிலை: `இடி மின்னலுடன் கூடிய மழை' - எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீவேகத்தில் த... மேலும் பார்க்க

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வா... மேலும் பார்க்க