செய்திகள் :

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

post image

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.

எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இது சீனாவைச் சேர்ந்த பிராந்தியம் ஆகும். இங்கே கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பனிப்புயல் தொடங்கியுள்ளது. அது சனிக்கிழமை முழுவதுமே தொடர்ந்துள்ளது.

இதனால், சாலைகள் அடைபட்டு, ஏற்கெனவே மலையில் இருந்த டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

எவரெஸ்ட் சிகரம் | பனிப்புயல்
எவரெஸ்ட் சிகரம் | பனிப்புயல்

தற்போது சிகரத்தில் சிக்கி உள்ள வீரர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.

இவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராமவாசிகளும், சீன மீட்புப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்டனர் என்று சீனாவில் இருந்து வெளியாகும் அறிக்கைகள் கூறுகின்றன.

இந்த வாரமும் கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மைய அறிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரமும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கைப்படி, இந்த வாரம் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 17 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ... மேலும் பார்க்க

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீ... மேலும் பார்க்க

வானிலை: `இடி மின்னலுடன் கூடிய மழை' - எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீவேகத்தில் த... மேலும் பார்க்க

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும்? - வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாட்டில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன... மேலும் பார்க்க