செய்திகள் :

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

post image

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.

அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் புயலுக்கு 'சக்தி' என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் மழை பெய்யும்.

சென்னை வானிலை மையத்தின் அறிக்கை படி,
மழை
மழை

இன்று காலை 10 மணி வரை...

திருவள்ளூர், காஞ்சிபுரம், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்.

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

ஏற்கெனவே, இந்த வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

வானிலை: `இடி மின்னலுடன் கூடிய மழை' - எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீவேகத்தில் த... மேலும் பார்க்க

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும்? - வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாட்டில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன... மேலும் பார்க்க

Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்?

மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி வரை மழை! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? வானிலை மையத்தின் அப்டேட்

சென்னை வானிலை மையம் அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் என்ன குறிப்பிட்டுள்ளது? இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்ன... மேலும் பார்க்க

தண்ணீரில் மிதக்கும் கொல்கத்தா; மழைக்கு 7 பேர் பலி; முடங்கிய போக்குவரத்து!

கொல்கத்தாவில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை கனமழை பெய்தது. இம்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழையால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு உட்பட பல... மேலும் பார்க்க