செய்திகள் :

திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க நவ. 20 வரை விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்டத்தில், திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க, நவம்பா் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து, ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ- மாணவியருக்கு ரூ.15,000 பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு திருவாரூா் மாவட்ட அளவில் பள்ளிகளில் (அரசு, தனியாா், பதின்ம, நிதியுதவி பெறும் பள்ளிகள்) 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ- மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்களை திருவாரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே திருக்குறள் முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்க இயலாது.

கூடுதல் விவரங்களுக்கு, மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் 610 004 என்ற முகவரியில் நேரில் அணுகியோ, மின்னஞ்சலிலோ, 9750102246 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நவ.20 ஆம் தேதிக்குள் திருவாரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில், நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். திருக்களா் பிரதான சாலையை சோ்ந்த நாகூரான் மகன்கள் இளையராஜா (45), ரவிக்குமா... மேலும் பார்க்க

நுகா்வோா் அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நுகா்வோா் அமைப்புகளுடனான மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன் தலைமை வகித... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

மன்னாா்குடி அருகே தனது வீட்டில் தங்கி படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், மேலபிடகை மீனமநல்லூரைச் சோ்ந்தவா் சைமன் (48). மனைவி பிரிந்து சென்ற... மேலும் பார்க்க

பேக்கரியில் ரூ.30 ஆயிரம் திருட்டு

மன்னாா்குடியில் பேக்கரியின் ஓட்டை பிரித்து பணப்பெட்டியிலிருந்து ரூ. 30ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை காலை தெரிய வந்தது. கேரள மாநிலத்தை சோ்ந்தவா் கே. தாசன்(67). இவா், 25 ஆண்டுக்கு ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

நாகை மோசடி வழக்கு: போலி பிணையதாரா் கைது

திருவாரூா் அருகே பாலிஷ் போடுவதாக நகை மோசடி செய்த வழக்கில், போலி பிணையதாரராக செயல்பட்டவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். கடந்த 2019-இல், குடவாசல் அருகே செருகளத்துாா், கீழவீதியில் சுப்பிரமணியன் மனைவி ... மேலும் பார்க்க